நன்மைகள்
10)மத சின்னங்களை உடம்பு முழுக்க சுமந்து திரிய தேவையில்லை.
09)வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லத் தேவையில்லை.
08)கஷ்டப்பட்டு மத நூல்களை நெட்டுரு போட்டு நாக்குத் தள்ளத் தேவையில்லை. பரீட்சையில் விளக்கவுரை எழுதி முழி பிதுங்க வேண்டியிருக்காது.
08)கஷ்டப்பட்டு மத நூல்களை நெட்டுரு போட்டு நாக்குத் தள்ளத் தேவையில்லை. பரீட்சையில் விளக்கவுரை எழுதி முழி பிதுங்க வேண்டியிருக்காது.
07)எல்லா நாளும் எல்லா வகை உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். கடவுளையும் வஞ்சிர மீன் வறுவலையும் ஒரே சமயத்தில் நினைக்கத் தேவை இருக்காது.
06)சடங்குகளுக்கு அடிமையாக தேவையில்லை. நினைத்த நேரம் நினைத்த வேலையை நினைத்தது போல செய்ய முடியும். கூடிக் கும்மியடிக்க அவசியமில்லை.
05)நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முடியும்.
04)தேவையற்ற நம்பிக்கைகளில் கவனம் கலையாது. லாரிக்கு எலுமிச்சம்பழம் கட்டத் தேவையில்லை.
03)மதத்தை காத்துக்கொள்ள யாரிடமும் சண்டைக்குப் போக வேண்டியதில்லை.மதம் அழியுதே என்று அழவும் தேவையில்லை.
02)எல்லா மதத்தவர்களையும் ஒரே மாதிரி பார்த்து அன்பு செலுத்த முடியும். ஆண், பெண், சாதி, குலம், கோத்திரம் பார்க்கத் தேவையில்லை.
01)மதம் பிடித்து அலையும் நோய் தாக்காது. ஹெல்தியாக இருக்க முடியும்.
தீமைகள்
![]() |
| ழான் போல் சாத்தர்- ஏதிஸ்ட் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் ( நாத்திக இருத்தல்வாதி!) |
05)கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்க முடியாது. பிகரைக் கரெக்ட் பண்ண கூட, உழைத்தே ஆக வேண்டும். அதே போல, பிழை விட்ட பின் நைசாக கடவுளைக் குறை சொல்ல முடியாது. முழுக்க முழுக்க தானே பொறுப்பேற்க வேண்டும்.
04)எதற்காகவும் கடவுளைத் துணைக்குக் கூப்பிட முடியாது. கடவுளின் தோளில் சாய்ந்து அழ முடியாது. தனியே வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
03)செண்டிமெண்ட்கள் வைத்து தைரியத்தை பூஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாது. தாயத்து எல்லாம் கட்ட முடியாது.
02)கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கவோ, செய்த பிழையை மறைக்க ஐஸ் வைத்து திருப்திப்படவோ முடியாது.
04)எதற்காகவும் கடவுளைத் துணைக்குக் கூப்பிட முடியாது. கடவுளின் தோளில் சாய்ந்து அழ முடியாது. தனியே வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
03)செண்டிமெண்ட்கள் வைத்து தைரியத்தை பூஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாது. தாயத்து எல்லாம் கட்ட முடியாது.
02)கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கவோ, செய்த பிழையை மறைக்க ஐஸ் வைத்து திருப்திப்படவோ முடியாது.
01)நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!

