வேலாயுதம்v.ஏழாம் அறிவு-முந்துவது யார்?



சில பேர் ஏழாம் அறிவு பார்த்திருப்பீங்க ஆனா வேலாயுதம் பார்த்திருக்க மாட்டீங்க, சில பேருக்கு வேலாயுதம் டிக்கட் கிடைச்சிருக்கும், ஆனா ஏழாம் அறிவை மிஸ் பண்ணிருப்பாங்க, சில பேரோ ரொம்ப பாவம், ரெண்ணு படத்தையுமே பார்த்திருக்க முடியாம யு டியூப் இல விரல் தேய தேடிக்கிட்டுருப்பாங்க. பட், ரெண்ணு படத்தையுமே பாத்தவங்களால தான் கரக்டா எது பெட்டர்னு சொல்ல முடியும்.





முதல்ல சூலாயுதம், சாரி வேலாயுதம். படத்தோட கதை என்னன்னா, விஜய் ஒரு பால் காரரா வர்றாரு. அவரோட பாச மலர் தங்கச்சி சரண்யா மோகன். இவரை ஊர் பெரிய மனுஷன் முத்துப் பாண்டி ஐ லவ் யூடா செல்லம்ன்னு துரத்திக்கிட்டு திரியறாரு. ஆனா சரண்யாவோ விஜயோட பிரெண்டு ஓட்டேரி நரியை ஒரு தலையா காதலிக்கிறாங்க. ஓட்டேரி நரியோட அப்பா பெரிய மாட்டுப் பண்ணை வைச்சிருக்காரு. விஜய் தங்கச்சிக்காக ஓட்டேரி நரியை பொண்ணு கேக்க, சீ..பையன் கேக்க போனப்போ நரியோட அப்பா சனியன் சகடை விஜயை நிக்க வைச்சி அவமானப் படுத்தி அனுப்பிடறாரு. ஒங்கிட்ட ஒரு மாடு தான் இருக்கு, என்கிட்டே மாட்டு பண்ணையே இருக்கு ன்னு கேலி பண்னறாரு. ஒடனே விஜய்க்கு ரோஷம் வந்து, "நான் ஒரு மாடு வைச்சிருக்கிறது நூறு மாடு வைச்சிருக்கிறதுக்கு சமம்" அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசறாரு.

"இதோ பார், இன்னும் ஒரு வருஷத்தில உன்கிட்ட இருக்கிற மாடுகளை விட ஒரு மாடு அதிகமா வாங்கி காட்டறேண்டா! " அப்படின்னு சவால் விட்டுட்டு வந்திடறார். விஜயோட பஞ்ச் டைலாக் ல ஈர்க்கப்பட்ட ஹன்சிகா விஜயை லவ் பண்ண ஆரம்பிக்கிறா.

அன்னிக்கு ராத்திரியே சனியன் சகடை பான்பராக் ரவியோட கூட்டு சேர்ந்து விஜய் வச்சிருந்த ஒரே ஒரு மாட்டையும் திருடறார். அந்த மாடு காணாம போன அதிர்ச்சில விஜயோட குடும்பம் சூசைட் பண்ணி செத்து போகுது. விஜய் தனி ஆளா மாட்டை தேடி கண்டு பிடிக்க புறப்படறார்.

அப்புறமா விஜய் டி கடையில பேப்பர் பார்த்துகிட்டிருக்கும் போது பேப்பர் இல ஒரு ஸ்கூப் நியூஸ். என்னன்னா, சென்னையில ஒரு அதிசய மாடு, 'அம்மா' ன்னு கத்தறதுக்கு பதிலா 'ங்ணா' அப்படின்னு கத்தறதுன்னு. உடனே விஜய் அந்த நியூஸ் பேப்பர் கம்பனியத் தேடி சென்னைக்கு புறப்படறாரு.அங்கன வந்தப்புறம் தான் தெரியுது அந்த நியூஸ் போட்ட ரிப்போர்டர் ஜெனிலியான்னு. ஜெனிலியாவைக் கூட்டிகிட்டு அந்த மாட்டை தேடி விஜய் போறார். அந்த மாடு இப்போ ராமராஜன் கஸ்டடியில இருக்குது. லோக்கல் ஏரியா வில்லங்க கிஷோர், சுமன் ஆளுங்க அந்த மாட்டை ராமராஜன் கிட்டேயிருந்து புடுங்கிடறாங்க. விஜய் அந்த லோக்கல் ரவுடிங்க கிட்டயிருந்து சென்னையை காப்பாத்தரதுக்கோசரம் ஒரு அருவாப் பட்டறையில வேலைக்கு சேர்ந்து வேலாயுதம், சூலாயுதம்ன்னு பல ஆயுதங்களை தயார் பண்ணிக்கிறாரு. "ங்ணா, சிங்கம் சிங்கிளா வரும், மாடு மந்தையா தான் வரும் " , " என்ன தான் 'தல' க்கு வாட்ச் கட்டி விடுரதுன்னாலும் 'கையில' தான் கட்டி விடனும்" அப்படின்னு பஞ்ச் டைலாக் பறக்க விடுறாரு. கடைசியில அவர் சென்னைக்கு மோட்சம் வாங்கி கொடுத்தாரா, தன்னோட மாட்டை கண்டு பிடிச்சாரா, சனியன் சகடையோட விட்ட சவால்ல ஜெயிச்சாரா என்கிறது தான் கிளைமாக்சே. இதில ட்விஸ்ட்டு என்னன்னா, விஜய் ஒரு சி.பி.ஐ. போலீஸ் ஆபீசர்ங்கிறது தான்.




அடுத்ததா ஏழாம் அறிவு படத்தை பார்க்காதவங்களுக்காக அந்த படத்தோட கதை. இவங்க மொத்தம் நாலு பேர். புத்தரோட அப்பிரசெண்டுக. போதி தர்மன், போதி அருச்சுனன், போதி வீமன், போதி நகுலன். இவங்களுக்கு வீரம்னா என்னன்னே தெரியாது. எப்பவுமே ஒண்ணா தான் திரிவாங்க. இவங்களை நாலு போரையும் நாலு திக்கா பிரிச்சு அனுப்பிடறாரு புத்தர். இதில போதி தர்மன் சூர்யா சைனாக்கு போறாரு. அங்க போய் புரூஸ் லீ கிட்ட குங் பூ கத்துக்கிறாரு நம்ம சூர்யா. சிக்ஸ் பேக் ஏத்தி பேர் பாடி காட்டறாரு. அப்பாலிக்கா ஜாக்கி சான், ஜெட் லீ கடைசியா குங் பூ பண்டா வரைக்கும் எல்லாருக்கும் குங் பூ கத்துத் தராரு. இவர்கிட்டே நிறைய ஸ்டூடண்ட்ஸ் போனதால பொறாமைப்பட்ட குங் பூ மாஷ்டருங்க எல்லாருமா ஒண்ணா சேர்ந்து சூர்யாவைக் கொன்னு சீனாவோட மஞ்சள் நதியில தூக்கி போடறாங்க.

அப்போ செத்து போன சூர்யா வோட பிரேதாத்மா இப்போ சென்னையில மறுபிறவி எடுத்து வளர்றது. சுருதி பயோ மெடிக்கல் காலேஜ்ல படிக்கறா. அதே காலேஜ்ல சூர்யாவும் அவளை கரெக்ட் பன்னறதுக்காகவே சேர்றாரு.அப்போ அவருக்கு சில நேரங்கள்ல நார்மல் மெமரி லாஸ் ஆகுது. அந்த சமயங்கள்ல அவருக்கு எதிர்காலத்தில நடக்க போறது எல்லாம் இப்பவே தெரியுது. உதாரணமா, சுருதி இந்த செமெஸ்டர்ல 2 சப்ஜக்ட் அரியர்ஸ் வைக்கபோறா, நாளைக்கு காலேஜ் காண்டீன்ல போண்டா போடுவாங்களா மெதுவடை போடுவாங்களா, தி.மு.க. இல நாளைக்கு அரெஸ்ட் ஆகபோறது வீரபாண்டி ஆறுமுகமா பொன்முடியா மாதிரியான இம்ப்பார்டன்ட் மட்டேர்ஸ் எல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சுக்கிற ஒரு சூப்பர் பவர் சூர்யாக்கு இருக்குங்கறது அவருக்கு தெரிய வருது.

ஒரு வாட்டி சூர்யா வச்சிருந்த நவரத்ன ஆயில்ல வழுக்கி விழுந்து ஸ்ருதிக்கு ஆக்சிடன்ட் ஆகுது. அப்போ ஸ்ருதியை அவங்க அம்மா வீடு இருக்கற காஞ்சிபுரத்துக்கு கூட்டிட்டு போறார் சூர்யா. அங்க போனப்புறம் அவருக்கு பழைய நினைப்பு எல்லாம் வருது. அப்பிரசெண்டா இருந்தது, மொக்கை படம் எல்லாம் நடிச்சு வெறுப்பேத்தினது , சரோஜா தேவியோட சோப்பு டப்பா வித்தது, ஜோ வும் தானும் வெறும் பிரெண்ட்ஸ் தான்னு பேட்டி கொடுத்தது, லைலாவோட நாலு படம் பண்ணினது, எல்லாம் நினைவுக்கு வருது.

லாஸ்டா சீனாவுல வச்சு தன்னை போட்டு தள்ளினாங்க என்கிறதும் நினைவுக்கு வருது. கொலை பண்ணின மாஸ்டர்ஸ் எல்லாத்தையும் பழி வாங்க திருப்ப சீனாவுக்கு புறப்படறாரு சூர்யா. அந்த மாஸ்டர்ஸ் எல்லாம் இப்போ பீட்டர் ஹெயன், கனல் கண்ணன், அனல் அரசு, ராம்போ ராஜ்குமார், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆக மறுபிறவி எடுத்து கோடம்பாக்கத்தில சுத்தி கிட்டிருக்கிறது அவருக்கு தெரிய வருது. இவங்களை அழிக்க ஸ்ருதியோட ஹெல்ப் ல பயோ மெடிக்கல் வப்பன் அதாவது உயிராயுதம் தயார் பண்ணறார் சூர்யா. அவ்வளவு பேரையும் உக்கார வச்சு சிவ குமாரை சங்க காலப் பாடல்களை பற்றியும் கம்ப ராமாயணத்தை பற்றியும் நான் ஸ்டாப்பாக ஸ்பீச் பண்ண வைக்கிறாரு சூர்யா. அந்த உயிர் ஆயுதத்தை தாக்கு பிடிக்க முடியாம மாஸ்டர்ஸ், இதுக்கு வேலாயுதமே பெட்டர்ன்னு போயிடறாங்க.

ரெண்டு படத்தோட கதையும் கேட்டீங்க இல்லையா, இப்ப நீங்களே மார்க் போட்டுகோங்க. உங்களுக்கே இப்போ தெரிஞ்சிருக்கும் எந்த படம் ரேஸ் ல முந்துது அப்டீன்னுட்டு.

( ஹி..ஹி..ரெண்டு படத்துக்குமே டிக்கட் கிடைக்காததால இப்படி ரூம் போட்டு உக்காந்து கதையை யோசிக்க வேண்டியது ஆய்டிச்சு....சாரிங்ணா ...!)

2 Responses
  1. டினேஷ் Says:

    ஹிஹிஹி, உங்க 2 கதையும் நல்லாத்தான் இருக்கு , யாரும் சுட்டு படம் எடுக்க போறாங்க..:)
    குறிப்பு: இன்னும் 2 படங்களும் பார்க்கவில்லை, பார்த்துட்டு சொல்லுறன், உங்க கதையா / முருகதாஸ் கதையா / ராஜா கதையா நல்லாயிருக்கு எண்டு..!!


  2. செம காமடி ..
    ரொம்ப நாளுக்கப்புறம் மனசு விட்டு சிரிச்சேன்..
    தேங்க்ஸ்..


Related Posts Plugin for WordPress, Blogger...