எம்.ஜி.ஆர்- என்றைக்கும் மன்னாதி மன்னன்

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான முக்கியமான ஒற்றுமை, வேற்றுமை ஒன்று என்ன தெரியுமா? தெரியா விட்டால் போனால் போகிறது, அதைக் கடைசியில் பார்க்கலாம். உண்மையில் எம்.ஜி.ஆர் இன்றைய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சித் தளபதி, ( இப்பவே கண்ணை கட்டினால் எப்படி..மற்ற மொழியில் உள்ள பட்டங்களையும் போட வேண்டாமா? ) எல்லோருக்கும் முன்னோடி. புரட்சித் தலைவர் மற்றும் பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் திரையில் இவர் பெயருக்கு முன்னால் போடப் பட்டாலும் மக்கள் திலகம் என்ற பேரைக் கேட்டதும் அந்த நாளில் நிஜமாகவே ச்சும்மா அதிர்ந்திருக்கும்!

கடந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் இல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி திரும்பவும் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தாலும், இடைத்தேர்தலில் பா.. . இடம் கூட அடிவாங்கி மூன்றாம் இடத்துக்கு தள்ளப் பட்டு, கட்சி இனி தேறாது என்று சில முக்கிய தலைகளே .தி.மு.. இல் இருந்து தி.மு.. இற்கு இடம் மாறி இருந்தாலும் கடைசியில் சுனாமி போல எழுந்து மைனோரிட்டி தி.மு.. போல இல்லாமல் (!) பெரும்பான்மை ஆசனங்களோடு ஆட்சியை பிடித்ததற்கு ஸ்பெக்ட்ரம் ஐயும் மீறி இரண்டு காரணங்கள்: ஒன்று, கருப்பு எம்.ஜி.ஆர் (!); இரண்டு, நிஜமான வெள்ளை எம்.ஜி.ஆர். .தி.மு.. இற்கு இன்னும் கிராமங்களில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள். அத்தோடு, ஜெயலலிதா என்ன பாவம் பண்ணினாலும் எம்.ஜி. ஆருக்காக மக்கள் மன்னித்து விடத் தயாராகவும் இருக்கிறார்கள். சில இடங்களில் இன்னும் எம்.ஜி.ஆர் இறக்கவில்லை என்று நம்பும் ஜனங்களும் இருக்கிறார்கள். இதை
வைத்து வரும் வடிவேலு நகைச்சுவைக் காட்சி ஞாபகம் வரலாம்.



எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மேல் அசைக்க முடியாத பாசம் இருந்தது தெரியும். உண்மையில் ஜெயலிதா எம்.ஜி.ஆரின் முதல் மனைவி போலவே அச்சு அசலாக இருந்தது தான் அதற்கான காரணம். முதல் மனைவி மேல் அதிகம் அன்பு வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். ஆனாலும் அவர் ஒரு வருடத்திலேயே இறக்க நேரிட்டது. இதனால் சில காலங்கள் கழித்து ஜெயலலிதாவை காண நேரிட்ட போது எம்.ஜி. ஆரிட்கு இறந்த மனைவி உயிருடன் எழுந்து வந்தது போல ஒரு இன்ப அதிர்ச்சி நேரிட்டிருக்கும். பார்கவியும் எம்.ஜி.ஆறும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சில வருடங்களுக்கு முன் குமுதம்-ஜங்க்ஷன் இதழில் வெளிவந்தபோது கீழே பெயர்கள் தராவிடில் இது எம். ஜி.ஆர்.ஜெயலலிதா ஸ்டில் என்றே நினைத்திருப்பார்கள். இதனால் 'இருவர்' படத்தில் மணிரத்னம், முதல் மனைவிக்கும் ஐஸ்வர்யா ராய் நடிக்கச் செய்திருப்பார். ( குட்டி ஐஸா குட்டி அபிஷேக்கா என்று பந்தயங்கள் தொடக்கி இருக்குமே!) கடைசியில் ஆர்.வீரப்பன் போன்றவர்கள் ஜெயலலிதாவை வெறுத்து லதாவை முன்னணிக்கு கொண்டுவர யோசித்தாலும் எம்.ஜி.ஆரால் முடியாமல் போனதற்கும் இது தான் காரணமாக இருந்திருக்கலாம்.


பழைய நடிகைகள் இன்றைக்கும் தங்கள் பேட்டிகளில் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் பற்றி ஒருவரியாவது கூறாமல் இருந்ததில்லை. பத்மினி அமெரிக்க சென்று செட்டில் ஆனபோது அவரிடம் பலவருடங்களாக வேலை பார்த்த ஒப்பனையாளரை மஞ்சுளாவிடம் வேலைக்கு சேர்த்து விட்டதை பத்மினி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். 'ஆடலுடன் பாடலை கேட்டு...' எம்.ஜி.ஆருடன் என்று பாங்கரா ஆடிய விஜயலட்சுமியை ஞாபகம் இருக்கிறதா? அந்த நாளில் ஐட்டம் நம்பர் நடனங்களுக்கு பெயர் போனவர். இப்போது அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றில் நிதியியல் இயக்குனராக இருக்கிறார் என்பது ஒரு இனிய ஆச்சர்யம். ஒருமுறை படப்பிடிப்பொன்றில் எல்லோரும் தாகத்தால் தவித்தபோது குளிர்பான வான் ஒன்றையே கொண்டுவந்து நிறுத்தினார் என்று கூறுவார்கள். எம்.ஜி.ஆர். மறைந்த சமயம் சரோஜா தேவி ஒரு ஹோட்டலில் உணவருந்தியபடி இருந்திருக்கிறார். அங்கு வேலை பார்த்த ஹோட்டல் சிப்பந்தி ஓடி வந்து கூறினானாம், ' அம்மா, உங்க ஜோடி போச்சும்மா...' என்று. எம்.ஜி. ஆர்.- சரோஜா தேவி போல இன்னொரு ஜோடி இன்றைக்கும் உருவாகவில்லை என்பது தான் உண்மை. இன்னொரு சுவாரசியமான சம்பவம். ஒருவர் ஒருமுறை ரிக்க்ஷா ஒன்றில் போன போது எம்.ஜி.ஆரை வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிறார். ரிக்க்ஷாவில் இருந்து இறங்கியதும் அந்த ரிக்க்ஷாக்காரர் கூறி இருக்கிறார், ' நான்கிரதால ஒன்னும் பண்ணாம விட்டிருக்கேன், இதே வேற யாராவதுன்னா அடிச்சுத் துவைச்சிருப்பாங்க....மவனே நீ வந்த இந்த ரிக்க்ஷாவே எனக்கு அவர் வாங்கி தந்தது தான்யா..!'

நல்லவர்களுக்கு தான் நல்லவர். நடிகை ஒருவருடன் சேட்டை விட்ட யாரோ ஒரு நடிகரை தோட்டத்தில் மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும் ஒரு கிசு கிசு இருந்தது. திராவிடக் கொள்கை இருந்தாலும் உள்ளுக்குள் இருந்த பக்தியால் பவுடரையே திருநீறு போல நெற்றியில் மெலிதாக பூசி இருப்பார் என்று சாண்டோ சின்னப்பா தேவர் ஒருமுறை இன்னொரு நண்பரிடம் கூறினாராம்! ரஜினி எவ்வளவு மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், வா தலைவா, வா என்று ரசிகன் கையை பிடித்து இழுத்தாலும், வருவேன், வர மாட்டேன்...வராமலும் விடுவேன்..வந்தாலும் வருவேன்..எனக்கே தெரியாது..என்று மண்டை குழம்பும் டயலாக் விடுவதோடு சரி. ஆனால் தைரியமாக அரசியலில் இறங்கி சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.. வில் சேர்ந்தாலும் கணக்குக் கேட்டதால் கருணாநிதியால் கட்சியை விட்டு விலக்கப்பட்டவர். ( ...ராசா...அப்பவே கணக்குக் கேட்க வேண்டிய நிலைமை தானா?! )

இவர் இருந்திருந்தால் இலங்கைப் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும் என்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரைக் கூப்பிட்டு யுத்தத் தளவாட வாகனக்கள் நிறைந்த வாகனம் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி எவ்வளவு உங்களால் கொண்டு போக முடியுமோ, அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக முன்பு ஒருமுறை பத்திரிகையில் வந்தது. அந்த்தக் காலத்திலேயே இரண்டு கோடி கொடுத்தார் என்றும் கூறுகிறார்கள். புலிகள் இவரது நினைவு நாளை அனுஷ்டித்தமையே அதற்கு சாட்சி. பிரபாகரனைப் போலவே இவரும் இலக்கம்.8!

இனி, முதல் வரியில் கேட்ட கேள்வி. ஒற்றுமை, இருவருக்கும் மூன்று மனைவிகள்! வேற்றுமை, புரட்சித் தலைவருக்கு பிள்ளைகளே கிடையாது. கருணாதியோ, மக்களைப் பெற்ற மகராசன்... பிள்ளைகள் கூடியதாலேயே பின்னவருக்குப் பிரச்சனை!

3 Responses
  1. டினேஷ் Says:

    நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு படைப்புக்ளும் ஒவ்வொரு ரகம்..
    ***எம்.ஜி.ஆர் க்கும் கருணாநிதிக்கும் இது மட்டுமா வேற்றுமை??? :)


  2. Anonymous Says:

    "ரஜினி எவ்வளவு மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், வா தலைவா, வா என்று ரசிகன் கையை பிடித்து இழுத்தாலும், வருவேன், வர மாட்டேன்...வராமலும் விடுவேன்..வந்தாலும் வருவேன்..எனக்கே தெரியாது..என்று மண்டை குழம்பும் டயலாக் விடுவதோடு சரி..."
    ரொம்ப நன்றாக உண்மைகளை எழுதியிருக்கிறீங்க..நானும் கேள்வி பட்டிருக்கிறேன் எம்.ஜி.ஆர் ஒரு கொடை வள்ளல் என்று ..:)


  3. aahaa. ஆஹா வரலாற்று உண்மைகள்.. எம் ஜி ஆர் போல வருமா?


Related Posts Plugin for WordPress, Blogger...